சினிமா

விஜய் பெற்றோருடன் எடுத்த புகைப்படம் : கொண்டாடும் ரசிகர்கள்

Published

on

விஜய் பெற்றோருடன் எடுத்த புகைப்படம் : கொண்டாடும் ரசிகர்கள்

[ புதியவன் ]

நடிகர் விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  தற்பொழுது காலிஃபோர்னியா சென்றுள்ளார் விஜய். , சென்னை, கேரளா, ரஷ்யா என பல இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.

Advertisement

கடந்த மாதம் படத்தின் முதல் பாடலான விசில் போடு என்ற பாடல் விஜய் பாடி வெளியாகி மிக வைரலாகியது,

படத்தில் அடுத்த பாடல் ஜூன் மாதம் வெளியிடப் போவதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் விஜய் அவர் பெற்றோரான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீண்ட நாட்கள் கழித்து விஜய்  தன் பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

Advertisement

கடந்த 2020 ஆம் ஆண்டு விஜய் -க்கும் அவரது தந்தையான சந்திரசேகர் இருவருக்கும் விஜய் அரசியல் வருவது குறித்தான கருத்து வேறுபாடுகள் நிலவியது.

ஆனால் தற்பொழுது விஜய் அரசியலில் களம் இறங்கியுள்ளார். அவருக்கென தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் விஜய் அவருடைய பெற்றோருடன் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. [ ஒ ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version