சினிமா
41 வயதில் பகத் பாசிலுக்கு ஏற்பட்டுள்ள நிலை.
41 வயதில் பகத் பாசிலுக்கு ஏற்பட்டுள்ள நிலை.
[ புதியவன் ]
பிரபல தென்னிந்திய நடிகர் பகத் பாசில், தனது 41 வயதில் கவனக்குறைவு மற்றும் அதிக செயல்பாடு கோளாறு நோய் மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொத்தமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆவேசம் மற்றும் புஷ்பா பட நடிகர் பகத் பாசில் கலந்து கொண்டார்.அப்போது கிராமத்தில் சுற்றித் திரியும் குழந்தைகளுக்கு இந்த நோயைக் குணப்படுத்துவது எளிதான விடயமா என மருத்துவரிடம் கேட்ட போது
சிறு வயதிலேயே இதைக் கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்த முடியும் எனவும் 41 வயதில் கண்டறியப்பட்டால் குணப்படுத்த முடியாது எனவும் தெரிவித்தாராம்
கவனக்குறைவு மற்றும் அதிக செயல்பாடு என்பது ஒரு நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு ஆகும்.
இது மூளையின் கவனம், நடத்தை மற்றும் உந்துவிசைக் கட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்தும் திறனைப் பாதிக்கிறது.
இது குழந்தைகளில் பொதுவானது. ஆனால் பெரியவர்களையும் பாதிக்கலாம் என கூறப்படுகிறது.[ ஒ ]