உலகம்

சிறு காயங்களுடன் உயிர் தப்பிய ஈரான் ஜனாதிபதி

Published

on

சிறு காயங்களுடன் உயிர் தப்பிய ஈரான் ஜனாதிபதி

ஜூன் 16 அன்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியன் லேசான காயமடைந்ததாக ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த தெஹ்ரானின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது இஸ்ரேலிய ஏவுகணை விழுந்ததில் பெசேஷ்கியன் காலில் காயம் அடைந்தார்.

Advertisement

ஜனாதிபதி பெசேஷ்கியானைத் தவிர, நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப், நீதித்துறைத் தலைவர் மொஹ்சேனி எஜேய் மற்றும் பிற மூத்த அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

பெஷேஷ்கியனுடன் சேர்ந்து, வெளியேறும் போது வேறு சில அதிகாரிகளும் சிறிய காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version