இலங்கை

செம்மணி விவகாரம் விரைவில் முடிவுக்கு வரவேண்டும் – அரச சார்பற்ற இணையங்களின் தலைவர் கருத்து!

Published

on

செம்மணி விவகாரம் விரைவில் முடிவுக்கு வரவேண்டும் – அரச சார்பற்ற இணையங்களின் தலைவர் கருத்து!

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (12) நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட அரச சார்பற்ற இணையங்களின் தலைவர் சுகிர்தராஜ்  இவ்வாறு தெரிவித்திருந்தார் அவர் மேலும் கூறுகையில்-

காலம் தாழ்த்தப்படும் புதைகுழிகள் உள்ளிட்ட விசாரணைகளை விரைவுபடுத்தி பாதிக்கப்பட மக்களுக்கு தீர்வை வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

Advertisement

எமது இணையம் 22 அமைப்புக்களை ஒன்றிணைத்து மனித உயிர்களின் பாதுகாப்பு அதற்காக குரல் கொடுத்துவரும் ஒன்றாகும்.

தற்போது வடக்கில் பல மனித அவலங்கள் நிகழ்த்தப்படதற்கான புதைகுழிகள் இனங்காணப்பட்டு அவை அகழப்படு அதிகளவான மனித என்புக்கூடுகள் மீட்கப்புள்ளன.

இது மிகப்பெரும் மனித உயிர் சார்ந்த விடையமாகும். எமது ஒன்றியம் கடந்த காலம் முதற்க்கொண்டு இன்றுவரை மனித உரிமைகள் பாதுகாப்பு சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி குரல் கொடுத்து அரசுகளுக்கு பெரும் அழுத்தை கொடுத்து வரும் அமைப்பு என்ற ரீதியில் தற்போதைய பேசுபொளான மனித புதைகுழி விவகாரத்துக்கு உடன் விசாரணை மேற்கொடு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

Advertisement

அத்துடன் அண்மையில் கொழும்பில் மர்மமான முறையில் இறந்த பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பிலும் விசாரணைகள் செய்யப்படு உண்மை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version