இலங்கை

மீண்டும் உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

Published

on

மீண்டும் உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (14) மீண்டும் தனது உச்ச மதிப்பைப் பதிவு செய்தது.

இன்றைய வர்த்தக நாள் முடிவில், ASPI 297.13 புள்ளிகள் (1.60%) உயர்ந்து 18,838.39 புள்ளிகளாகப் பதிவானதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

Advertisement

இந்த உயர்வுக்கு 132 நிறுவனங்களின் பங்கு விலை அதிகரிப்பு காரணமாக அமைந்துள்ளது.

அதேவேளை, S&P SL20 சுட்டெண் 167.15 புள்ளிகள் (3.05%) உயர்ந்து 5,653.65 புள்ளிகளாகப் பதிவானது.

இன்றைய மொத்த வர்த்தகப் புரள்வு 9.49 பில்லியன் ரூபாவாக பதிவானதாக கொழும்பு பங்குச் சந்தை மேலும் தெரிவித்தது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version