இலங்கை
இலங்கையை அதிரவைத்த துப்பாக்கிச்சூடு ; பழம் பறிக்கச் சென்ற நபர் சுட்டுக்கொலை
இலங்கையை அதிரவைத்த துப்பாக்கிச்சூடு ; பழம் பறிக்கச் சென்ற நபர் சுட்டுக்கொலை
மீரிகமவின் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள துரியன் தோட்டமொன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அப்பகுதியில் உள்ள ஒரு துரியன் தோட்டத்திற்கு வந்த திருடனைத் தோட்டத்தின் காவலரே துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட காவலாளி மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் தற்போது மீரிகம மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.