இலங்கை

குடும்ப பெண்ணை பலியெடுத்த விபத்து ; விசாரணைகள் தீவிரம்

Published

on

குடும்ப பெண்ணை பலியெடுத்த விபத்து ; விசாரணைகள் தீவிரம்

கம்பஹாவில் நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீரிகம – பஸ்யால வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று  (13)  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

மீரிகமவிலிருந்து பஸ்யால நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த வேனுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெவலபொல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடையவரும் நிகஹெட்டிகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

இதனையடுத்து வேன் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version