இலங்கை
நான் போகிறேன் :என் வேலையை நீ பார்! – பிரதானவீதியில் இளைஞனுக்கு பொலிஸ் அதிரடி செயல்!
நான் போகிறேன் :என் வேலையை நீ பார்! – பிரதானவீதியில் இளைஞனுக்கு பொலிஸ் அதிரடி செயல்!
நேற்றய தினம் (13) போக்குவரத்து நடைமுறைகளை மீறி பயணித்த இளைஞரை அழைத்து நடுவீதியில் படிப்பித்த பொலிஸாரின் செயல் சமூக வைலத்தளங்களில் வைரலாகி வருகிறது
கதிர்காமம் பகுதியில் உள்ள பிரதான வீதி ஒன்றில், சனநெரிசல் அதிகமாக இருந்துள்ளது. அப்போது போக்குவரத்து பொலிசார் தமது கடமைகளை செய்துகொண்டிருந்தனர்.
அந்தவகையில் ஒரு போக்குவரத்து பொலிஸார் வாகன நெரிசலை கட்டுப்படுத்தி வாகனங்களை வரிசைப்படுத்திக்கொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞர் மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்து பிரதான வீதிக்குள் நுழைந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த போக்குவரத்து பொலிசார், அந்த இளைஞனை அழைத்து நடுவீதியில் நிறுத்தி “எனது பணியை நீ பார் என சைகையால் கூறினார். குறித்த காட்சி பிரதான வீதியில் சென்ற ஒரு வாகனத்தில் பதிவாகியிருந்தது.