இலங்கை

போலி ஆவணங்களுடன் மணல் கடத்தியோர் கைது

Published

on

போலி ஆவணங்களுடன் மணல் கடத்தியோர் கைது

போலி அனுமதிப் பத்திரங்களைத் தயாரித்து மணல் கடத்திய குற்றச்சாட்டில் இருவர் சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய டிப்பர் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் புத்தூர் சந்தியை அண்மித்த பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சாவகச்சேரிப் பொலிஸார் இரண்டு டிப்பர் வாகனங்களை வழிமறித்து சோதனையிட்டனர். வாகனங்களுக்குள் ஆற்று மணல் காணப்பட்ட நிலையில், மணல் எடுத்து செல்வதற்கு வழங்கப்பட்டதாகக் கூறி அனுமதிப்பத்திரத்தைச் சாரதிகள் கையளித்துள்ளனர். அவற்றைச் சோதனையிட்ட பொலிஸார் அவை போலியானவை என்பதைக் கண்டறிந்தனர்.

அதையடுத்துச் சந்தேகநபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் சாவ கச்சேரிப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version