இலங்கை

மஹரகமவில் இரு பேருந்துகள் மோதி விபத்து – நால்வர் வைத்தியசாலையில்!

Published

on

மஹரகமவில் இரு பேருந்துகள் மோதி விபத்து – நால்வர் வைத்தியசாலையில்!

மஹரகம, நாவின்ன பகுதியில் இன்று (14) காலை 6 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

 நாவின்ன பேருந்து நிலையத்திலிருந்து பிரதான வீதிக்குள் நுழைந்த பேருந்து ஒன்று, மஹரகமவிலிருந்து கொழும்பு நோக்கி பிரதான வீதியில் பயணித்த மற்றொரு பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

Advertisement

 ஒரு பேருந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மஹரகம பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

 காயமடைந்தவர்கள் தற்போது களுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version