இலங்கை

வீடு உடைத்துத் திருடியவர் 4 ஆண்டுகளின் பின் கைது

Published

on

வீடு உடைத்துத் திருடியவர் 4 ஆண்டுகளின் பின் கைது

வீடு உடைத்து நகைகள் திருடிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் நான்கு ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சுண்டிக்குழிப் பகுதியில் வீடொன்று உடைக்கப்பட்டு 10 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், ஒருதொகுதி நகைகளும் மீட்கப்பட்டிருந்தன. இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில், பொலிஸாரால் தேடப்பட்டுவந்தார். சாவகச்சேரியைச் சேர்ந்த 42 வயதான இந்தச் சந்தேகநபர் நேற்றுமுன்தினம் கொழும்பில் இருந்து வந்த போது யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். திருடப்பட்ட நகைகள் சந்தேகநபரிடம் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பொலிஸரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version