இலங்கை
ஆடிப்பிறப்பு
ஆடிப்பிறப்பு
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை கவின் கலைமன்றம் முன்னெடுக்கும் ஆடிப்பிறப்பு விழா நாளை புதன்கிழமை காலை 8.30 மணியளவில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் கலாசாலையின் முதல்வர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் சிறப்புற இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் கலாசாலையின் பழைய மாணவியும், கலைக் கோயில் நாட்டியப் பள்ளியின் இயக்குனருமான கலாபூஷணம் பத்மினி செல்வேந்திரகுமார் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்வார். தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடப் பத்திராதிபர் ஜீவா சஜீவன் அதிதிப் பேச்சாளராகக் கலந்துகொள்வார்.