இலங்கை

பழம் பறித்தால் துப்பாக்கி சூடா!!

Published

on

பழம் பறித்தால் துப்பாக்கி சூடா!!

மீரிகமவில் அனுமதியின்றி காணி ஒன்றினுள் தூரியன் பழம் பறிக்கச் சென்ற நபர் துப்பாக்கிச் சூட்டில்   உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இந்த துப்பாக்கிச் சூடு, அந்த காணியின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

மீரிகமவின் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள துரியன் தோட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட காவலாளி மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 

Advertisement

இந்நிலையில் இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அதில்  37 பேர் உயிரிழந்ததாகவும், 39 பேர் காயமடைந்துள்ளதாகவும்,   பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்தார். 

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 2025.01.01 முதல் 2025.07.13 வரை பதிவாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version