உலகம்

போரை நிறுத்தாவிடின் ரஷ்யா மீது 100 வீத “மிகக் கடுமையான வரி- ட்ரம்ப் எச்சரிக்கை

Published

on

போரை நிறுத்தாவிடின் ரஷ்யா மீது 100 வீத “மிகக் கடுமையான வரி- ட்ரம்ப் எச்சரிக்கை

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் போர் நிறுத்ததை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவுறுத்தி வரும் நிலையில் கடந்த மே மாதம் துருக்கியில் நடந்த பேச்சுவார்த்தை முடிவு ஏதுமின்றி முடிவடைந்தது. 

 இந்நிலையில் மீண்டும் போரை நிறுத்துமாறு டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யாவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

இதில் 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ரஷ்யா மீது 100% “மிகக் கடுமையான” இரண்டாம் நிலை வரிகளை அறிமுகப்படுத்துவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

 இந்த வரிகள், ரஷ்ய எண்ணெய், இயற்கை எரிவளி, யுரேனியம் உள்ளிட்ட பொருட்களை வாங்கும் நாடுகளுக்கு எதிராக விதிக்கப்படும். இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய முடியாது என்று டிரம்ப் கூறினார்.

இந்தியா (2024இல் 35% ரஷ்ய எண்ணெய் இறக்குமதி), சீனா (19%), மற்றும் துருக்கி (2023இல் 58% பதப்படுத்தப்பட்ட பெட்ரோலிய இறக்குமதி) போன்ற நாடுகள் இதனால் பாதிக்கப்படலாம். 

Advertisement

மேலும், அமெரிக்க செனட்டர்கள் 500% வரிகளை விதிக்கும் மசோதாவை ஆதரித்துள்ளனர். இது ரஷ்யாவின் போர் முயற்சிகளை பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

டிரம்ப், ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாததால் “மிகவும் அதிருப்தி” அடைந்துள்ளதாகவும், உக்ரைனுக்கு “மிக உயர்ந்த தர” ஆயுதங்களை நேட்டோ மூலம் அனுப்புவதாகவும் கூறினார்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version