இலங்கை

விசா விதிமுறைகள் மீறல் – வெளிநாட்டவர்களை நாடு கடத்தல்!

Published

on

விசா விதிமுறைகள் மீறல் – வெளிநாட்டவர்களை நாடு கடத்தல்!

சுற்றுலா விசாவில் நாட்டிற்குள் நுழைந்து தொழில் ஈடுபட்ட 10 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு – 03 பகுதியில் அமைந்துள்ள மசாஜ் நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று மாலை நடத்திய சிறப்பு சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

கைது செய்யப்பட்ட நபர்கள் சுற்றுலா விசாக்களில் நாட்டிற்குள் நுழைந்திருந்தனர்.

25 முதல் 39 வயதுக்குட்பட்ட பெண்களில் ஆறு தாய் நாட்டினர், மூன்று வியட்நாமிய நாட்டினர் மற்றும் ஒரு சீன நாட்டவர் அடங்குவர்.

கைது செய்யப்பட்ட குழுவினர் தற்போது மிரிஹான தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

மேலும், அவர்களை உடனடியாக அந்தந்த நாடுகளுக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version