இலங்கை

குப்பை அள்ளும் உழவு இயந்திரத்தில் கூட்டத்திற்கு வந்த மட்டு. தவிசாளர்

Published

on

குப்பை அள்ளும் உழவு இயந்திரத்தில் கூட்டத்திற்கு வந்த மட்டு. தவிசாளர்

  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை (16) அன்று நடைபெற்றகூட்டத்திற்கு ஏறாவூர் பற்றுசெங்கலடி பிரதேச சபை தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரன் மற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன் ஆகியோர் தங்களது சபைகளில் கழிவுகள் ஏற்றும் உழவு இயந்திரங்களில் சமூகமளித்திருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் தவிசாளர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களை கிழக்கு மாகாண பிரதம செயலகத்தினால் மீளப்பட்டுள்ளது.

Advertisement

இதன் காரணமாக தவிசாளர்கள் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு செல்வதற்கக வாகனங்கள் இல்லாமல் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

இந்நிலையில் அது தொடர்பில் இ கருத்து தெரிவித்த ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரன் பிரதேச சபையின் தவிசாளருக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ வாகனம் கிழக்கு மாகாண பிரதம செயலகத்தினால் மீள பெறப்பட்டுள்ளது.

இதை நாங்கள் பழிவாங்கும் நோக்கமாகவே கருதுகின்றோம். எமக்கு கூட்டத்திற்கு செல்வதற்கு வாகனம் இல்லாத காரணத்தினால் தங்களது சபைக்குச் சொந்தமான கழிவு ஏற்றும் உழவு இயந்திரத்தில் கூட்டத்திற்கு வந்துள்ளேன் என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version