சினிமா

‘பாட்ஷா’ திரைப்படம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில்..! ஜூலை 18ம் தேதி ரீ-ரிலீஸ்!

Published

on

‘பாட்ஷா’ திரைப்படம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில்..! ஜூலை 18ம் தேதி ரீ-ரிலீஸ்!

தமிழ் சினிமாவின் கலட்டா கிங் என்றே பேசப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாட்ஷா’ திரைப்படம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 18ம் தேதி, ரசிகர்களின் கோரிக்கையை எதிர்பார்த்தபடி, ரீ-ரிலீஸாகும்  என தகவலாகள்  வெளியாகி உள்ளன.1995ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி வெளியான ‘பாட்ஷா’, தமிழ்த் திரையுலகத்தில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இயக்குநர் சுரேஷ் கிறிஷ்ணா இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், மனிதநேயமும், ஆற்றலும் மிக்க ஒரு டான் கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களின் மனதில் ஆழமான இடம் பிடித்தார். ‘நான் ஒரு டான்’ என்ற வசனம் இன்றும் புகழுடன் பேசப்படுகிறது.30 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய தொழில்நுட்பத்துடன், மேம்படுத்தப்பட்ட ஒலி மற்றும் காட்சித்தரத்தில் திரும்பும் ‘பாட்ஷா’, பழைய தலைமுறையினருக்கு நினைவுகளையும், புதிய தலைமுறையினருக்கு புதிய அனுபவத்தையும் அளிக்கும் என எதிர் பார்க்கபடுகின்றது. ரசிகர்களுக்கான பண்டிகையாக இருக்கும் என பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து  வருகின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version