இலங்கை

சாவகச்சேரியில் நாய்கள் காப்பகம்; நகரசபையில் தீர்மானம்

Published

on

சாவகச்சேரியில் நாய்கள் காப்பகம்; நகரசபையில் தீர்மானம்

சாவகச்சேரி நகரத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தவும் விபத்துகளைத் தவிர்க்கவும் நகரத்தில் உள்ள நாய்களை அகற்றி பராமரிப்பதற்காக காப்பகம் அமைப்பதற்கு ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகரசபையின் மாதாந்த அமர்வு நேற்றுமுன்தினம் இடம்பெற்றபோதே நகரசபையின் உபதவிசாளர் ஞா.கிஷோர் நாய்கள் காப்பகம் அமைப்பதற்கான பிரேரணையை முன்வைத்தார்.

Advertisement

குறித்த பிரேரணையை வரவேற்ற சபை உறுப்பினர்கள், இடைநடுவில் கைவிடும் திட்டம் போலல்லாமல் சிறப்பாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்ததோடு குறித்த பிரேரணையை ஏகமனதாக நிறைவேற்றினர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version