இலங்கை

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு ; விசாரணைகளில் வெளியான தகவல்

Published

on

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு ; விசாரணைகளில் வெளியான தகவல்

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (18) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டை, திட்டமிட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான சாந்த குமார என்கிற கோஸ் மல்லி என்பவர் நடத்தியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பஸ் அசித, அந்தப் பகுதியில் உள்ள மற்றொரு திட்டமிட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான படோவிட்ட அசங்கவின் நெருங்கிய உறவினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இன்றைய துப்பாக்கிச் சூடு, இந்த இரு தரப்பினருக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் மோதலின் மற்றொரு விளைவாகக் கருதப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 46 வயதுடைய சுதத் குமார என்கிற பஸ் அசித, தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

படோவிட்ட அசங்கவின் போதைப்பொருள் வலையமைப்பில் விநியோகஸ்தராகப் பணியாற்றியதாகவும் தெரியவந்துள்ளது.

Advertisement

தெஹிவளை ரயில் நிலையம் அருகே பஸ் நிறுத்தப்பட்டிருந்தபோது, கருப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இருவரும் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு வெள்ளவத்தை நோக்கி தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version