இலங்கை

சட்டவிரோத நான்கு துப்பாக்கிகள் கைப்பற்றல்!

Published

on

சட்டவிரோத நான்கு துப்பாக்கிகள் கைப்பற்றல்!

கட்டான – தெமன்ஹந்திய பகுதியில் நான்கு சட்டவிரோத துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டான பொலிஸார் தெரிவித்தனர். 

நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Advertisement

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்  51 மற்றும் 58 வயதுடைய கட்டியால பகுதியைச் சேர்ந்தவர்கள். 

சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர், ரி-56 ரக துப்பாக்கியும் மற்றையவரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, ஒரு ரிவால்வர் அச்சு மற்றும் துப்பாக்கிகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பல கருவிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version