இலங்கை

பொத்துவில் ஆதார மருத்துவமனையில்:சிறுபிள்ளை மருத்துவ நிபுணரின் சேவைகள் ஆரம்பம்!

Published

on

பொத்துவில் ஆதார மருத்துவமனையில்:சிறுபிள்ளை மருத்துவ நிபுணரின் சேவைகள் ஆரம்பம்!

பொத்துவில் ஆதார மருத்துவமனையில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய தினங்களில் சிறுபிள்ளை மருத்துவநிபுணரின் சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும் என மருத்துவமனை அபிவிருத்திக்குழுவின் தலைவரும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கல்முனைக் கிளையின் செயலாளருமான டொக்டர் உவைஸ் பாறுக் தெரிவித்தார்.

மருத்துவமனையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் நிதின் ரனவக்கவுடன் இணைந்து தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சியின் பயனாக அம்பாறை, மாவட்ட பொது மருத்துவமனையின் சிறுபிள்ளை மருத்துவ நிபுணர் தனுஷியா சிவலிங்கம் வாரத்தில் இரு தினங்கள் பொத்துவில் மருத்துவமனைக்கு வருகை தந்து சேவையாற்றுவதற்கு முன்வந்துள்ளார்.

Advertisement

கடந்த 2025.07.15 ஆம் திகதி முதல் சிறு பிள்ளைகளுக்கான விசேட மருத்துவ நிபுணரின் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.

அந்தவகையில் வாரத்தில் இரு தினங்கள் இந்த சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும். எதிர்வரும் காலங்களில் ஏனைய விசேட மருத்துவ நிபுணர்களின் சேவைகளும் இந்த பிரதேச மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் எமது கோரிக்கைகளை ஏற்று எமது பிரதேச மக்களுக்காக சேவையாற்றுவதற்கு முன்வந்த சிறுபிள்ளை மருத்துவ நிபுணர் டொக்டர் தனுஷியா சிவலிங்கம் மற்றும் அற்காக உதவி ஒத்துழைப்புக்களை வழங்கிய அம்பாரை, மாவட்ட பொது மருத்துவமனையின் பணிப்பாளர் டொக்டர் சந்திரசேன, மருத்துவ அத்தியட்சகர் டொக்டர் நிதின் ரனவக்க ஆகியோருக்கு பொத்துவில் பிரதேச மக்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version