இலங்கை
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி!
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி!
கேகாலையில் அரநாயக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெபத்கம – கெவிலிபிட்டிய வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (17) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின் கம்பத்தின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அரநாயக்க பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஆவார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அரநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.