இலங்கை

இரவு நேரக் களியாட்ட விடுதிக்கு முன்பாக துப்பாக்கிச்சூடு

Published

on

இரவு நேரக் களியாட்ட விடுதிக்கு முன்பாக துப்பாக்கிச்சூடு

இன்று அதிகாலை   கொழும்பு – தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள இரவு நேரக் களியாட்ட விடுதி ஒன்றுக்கு முன்பாகத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது என்று தலங்கமை பொலிஸார் தெரிவித்தனர்.

 இரவு நேர களியாட்ட விடுதிக்கு வருகை தந்திருந்த இரண்டு தரப்பினர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisement

தகராறின் போது அங்கிருந்த நபர் ஒருவர் ரிவோல்வர் ரக துப்பாக்கியால் நான்கு தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

எவ்வாறிருப்பினும் இந்தத் துப்பாக்கிச்சூட்டின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அங்கிருந்த இருவரை உடனடியாகக் கைது செய்துள்ளனர்.

Advertisement

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தலங்கமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version