இலங்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

Published

on

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்றையதினம் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும்.

Advertisement

அத்துடன், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையில் மழை பெய்யக்கூடும்.

அதேநேரம், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் இடைக்கிடையில் மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் இடைக்கிடையில் மணிக்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

Advertisement

பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கோரியுள்ளது. 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version