இலங்கை
கேகாலை விபத்தில் மூவரின் நிலை கவலைக்கிடம்
கேகாலை விபத்தில் மூவரின் நிலை கவலைக்கிடம்
கேகாலை – கலிகமுவ பகுதியில் இரு பேருந்துகள் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்களில், மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கேகாலை பொது மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும், தனியார் பேருந்தொன்றும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் 28 பேர் காயமடைந்த நிலையில், அவர்களில் இருவர் வரகாபொல ஆதார மருத்துவமனையிலும், ஏனைய 26 பேர் கேகாலை பொது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் , கேகாலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.