இலங்கை
செம்மணி! தேவநேசன் நேசையாவின் அறிக்கையை தொடர்புபடுத்த வேண்டும்: பல உண்மைகள் வெளிவரும்! சுமந்திரன்
செம்மணி! தேவநேசன் நேசையாவின் அறிக்கையை தொடர்புபடுத்த வேண்டும்: பல உண்மைகள் வெளிவரும்! சுமந்திரன்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் கலாநிதி தேவநேசன் நேசையா தலைமையிலான குழுவினரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் உள்ள விபரங்களை தற்போது செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியில் கண்டறியப்படும் மனித எச்சங்களுடன் தொடர்புபடுத்தி ஆராய்வதன் ஊடாக பல்வேறு உண்மைகளை வெளிக்கொணரமுடியும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கென கலாநிதி தேவநேசன் நேசையா தலைமையில் கே.எச்.கமிலஸ் பெர்னாண்டோ, ஜெமிஸா இஸ்மாயில் மற்றும் எம்.சி.எம்.இக்பால் ஆகிய உறுப்பினர்களுடன்கூடியதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை 2003 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் திகதி ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை