இலங்கை

பனஹடுவ வாவியில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் – ஒருவர் பலி மற்றொருவர் மாயம்!

Published

on

பனஹடுவ வாவியில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் – ஒருவர் பலி மற்றொருவர் மாயம்!

உடவளவையில் உள்ள பனஹடுவ வாவியில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதோடு, மற்றொருவர் காணாமல் போயுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். 29 மற்றும் 30 வயதுடைய இருவரும் பனஹடுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

Advertisement

இருவரும் நீரில் மூழ்கியதை அவதானித்த நபரொருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, எம்பிலிப்பிட்டிய பொலிஸ் மற்றும் இலங்கை இராணுவத்தின் உயிர்காக்கும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

இதன்போது ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்தோடு, காணாமல் போன மற்றொரு நபரின் உடலைக் கண்டுபிடிக்கும் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version