இலங்கை
யாழில் வீட்டாரை மிரட்ட விளையாட்டு காட்டிய குடுபஸ்தருக்கு நேர்ந்த கதி
யாழில் வீட்டாரை மிரட்ட விளையாட்டு காட்டிய குடுபஸ்தருக்கு நேர்ந்த கதி
யாழில் மது போதையில் வீட்டாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டு , தனது உடலில் பெற்றோலை ஊற்றி தீ வைக்க போவதாக மிரட்டிய போது அந்நபரின் உடலில் தீ பற்றியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நயினாதீவு பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் , கடந்த 17ஆம் திகதி மதுபோதையில் வீட்டுக்கு சென்று வீட்டில் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதன் பின்னர் வீட்டில் இருந்த பெற்றோலை தனது உடலில் ஊற்றி , தனது உயிரை மாய்க்க போவதாக மிரட்டியுள்ளார் .
அதன் போது எதிர்பாராத விதமாக அவரது உடலில் தீ பற்றியுள்ளது.
அதனை அடுத்து வீட்டார் தீயினை அணைத்து, மருத்துவ மனையில் அனுமதித்த நிலையில் , நேற்றைய தினம் (20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.