இலங்கை

யாழ்ப்பாணம் கசூரினா கடற்கரையில் பாரிய தீ

Published

on

யாழ்ப்பாணம் கசூரினா கடற்கரையில் பாரிய தீ

  யாழ்ப்பாணம்  கசூரினா கடற்கரையில் நேற்றைய தினம் (20) இரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பிரதேச மக்கள் பொலிஸாருக்கும், கடற்படையினருக்கும் தகவல் வழங்கியதை அடுத்து அங்கு சென்ற பொலிஸாரும், கடற்படையினரும், பிரதேச சபையினரும் பவுசர்கள் மூலம் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Advertisement

தீ பரவியதையறிந்து கடற்கரைக்கு விரைந்த பிரதேச சபையினர், கடற்படையினர் ஆகியோர் நீண்ட போராட்டத்தின் பின் தீயினை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மேலும், கடற்கரையில் காணப்பட்ட சவுக்கு மரங்கள், பனை மரங்கள் என்பன தீயில் கருகி நாசமாகியுள்ளன.

தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

அதேவேளை யாழ்ப்பாணத்தின் பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றாக கசூரினா கடற்கரை உள்லமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version