இலங்கை

உச்சநீதிமன்ற புதிய பிரதம நீதியரசர் பதவிக்கு பரிந்துரை!

Published

on

உச்சநீதிமன்ற புதிய பிரதம நீதியரசர் பதவிக்கு பரிந்துரை!

உச்சநீதிமன்றத்தின் புதிய பிரதம நீதியரசர் பதவிக்கு நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசியலமைப்புப் பேரவைக்கு குறித்த பரிந்துரையை மேற்கொண்டுள்ளார்.

Advertisement

தற்போதைய பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ இம்மாதம் 25 ஆம் திகதியுடன் 65 வயது பூர்த்தியாவதன் காரணமாக தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்ளவுள்ளார்.

அதன் காரணமாக ஏற்படவுள்ள பிரதம நீதியரசர் பதவி வெற்றிடத்துக்கே நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version