இலங்கை

எனது புகைப்படத்தை பிரசுரித்து இனவாதத்தை தூண்டுகின்றனர் – ஹெக்டர் அப்புஹாமி சீற்றம்!

Published

on

எனது புகைப்படத்தை பிரசுரித்து இனவாதத்தை தூண்டுகின்றனர் – ஹெக்டர் அப்புஹாமி சீற்றம்!

எனது புகைப்படத்தை பிரசுரித்து இனவாதத்தை தூண்டும் வகையில் தேசியமக்கள் சக்தியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இன்றைய றாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Advertisement

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், 

கடந்த நாடாளுமன்ற அமர்வில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் உரையாற்றுகையில் அவரின் தமிழ் மொழியை கேலி செய்து அவமதித்ததாகத் தெரிவித்து தன்னுடைய புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பிரசுரித்து விமர்சித்துள்ளனர்.

அவர்களின் இவ்வாறான செயற்பாடு நாட்டில் இனங்களுக்கிடையில் பாரிய இனவாதத்தைத் தூண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

அதேவேளை, தாம் தமிழையும் தமிழ் மொழியையும் மதிக்கின்றோம். ஆகவே தாம் அவரின் மொழியை அவமதிக்கவில்லை எனவும் கூறியிருந்தார்.

அதன் போது சபாநாயகர் அவர் பேசுவதை தடுத்து நிறுத்த முற்பட்ட போது, அவர் சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version