இலங்கை

பல்வேறு திருட்டுக்களுடன் தொடர்புடைய நபர் கைது!

Published

on

பல்வேறு திருட்டுக்களுடன் தொடர்புடைய நபர் கைது!

பல்வேறு திருட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர், சாவகச்சேரி பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடியில் கடையொன்று உடைக்கப்பட்டு பெருந்தொகை பணம் மற்றும் கமரா என்பன திருடப்பட்டமை, யாழ்ப்பாணத்தில் கருவாட்டுக் கடையொன்று உடைக்கப்பட்டு இடம்பெற்ற திருட்டு, சாவகச்சேரியில் தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் இடம்பெற்ற திருட்டு ஆகியவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

சந்தேகநபரிடம் இருந்து சில சான்றுப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version