இலங்கை

மட்டக்களப்பு – ஏத்தாலைக்குளம் பறவைகள் சரணாலயத்தில் தீப்பரவல்!

Published

on

மட்டக்களப்பு – ஏத்தாலைக்குளம் பறவைகள் சரணாலயத்தில் தீப்பரவல்!

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் ஏத்தாலைக்குளம் பறவைகள் சரணாலயத்தில் நேற்று (24.07.2025) மாலை வேளையில் தீ பரவல் சம்பவம் பதிவாகியுள்ளது.

மெதுமெதுவாக பரவ ஆரம்பித்த தீ சரணாலயத்தை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.

Advertisement

பல்வேறு பிரயத்தனங்களுக்கு மத்தியில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதேபோல் கடந்த ஆண்டும் 27.09.2024 திகதியில் பாரியளவு, தீப்பரவல் இதேகுருக்கள்மடம் ஏத்தாலைக்குளம் பறவைகள் சரணாலயத்தில் ஏற்பட்டிருந்தது.

மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் கண்காணிப்பின் கண்காணிக்கப்பட்டு வருகின்ற இப்பறவைகள் சரணாலயத்திற்கு இலட்சக்கணக்கிலான உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் வருகை தருகின்றன.

Advertisement

இதனால் இப்பறவைகளின் நிலைத்திருப்பிற்கு இச்சம்பவம் சிக்கலானதாக அமைந்ததாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version