இலங்கை
அளவுக்கு மீறிய மதுபான பாவனையால் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி – யாழில் சம்பவம்!
அளவுக்கு மீறிய மதுபான பாவனையால் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி – யாழில் சம்பவம்!
யாழ்ப்பாணம் – கொட்டடி பகுதியைச் சேர்ந்த பற்றிக்கிளே ஜோபாஸ் (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்றுமுன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக மதுபானத்தை பாவித்து விட்டு வீட்டுக்கு வந்து உணவு அருந்திவிட்டு உறங்கியுள்ளார்.
பின்னர் அதிகாலை நேற்று (25) 4.15 மணியளவில் அவர் தூக்கில் தொங்குவதை அவரது பிள்ளைகள் அவதானித்தனர்.
இந்நிலையில் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
அளவுக்கு அதிகமாக மதுபானத்தை அருந்தியதால் தன்நிலை மறந்து இவ்வாறு உயிர்மாய்த்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.