இலங்கை

கொலை செய்து சடலத்தை வீதியில் வீசிய சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது!

Published

on

கொலை செய்து சடலத்தை வீதியில் வீசிய சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது!

ஹோமாகம பகுதியில் கழுத்தை நெரித்து ஒருவரை கொலை செய்து, சடலத்தை கிளை வீதியில் வீசிய கொடூர சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கடந்த ஜூலை 10 ஆம் திகதி நடந்த இக்குற்றம் தொடர்பில், நேற்றிரவு (25) மாதம்பிட்டிய, கிரேண்ட்பாஸ் பகுதிகளில் நடத்திய சோதனையின் போது நுகேகொட குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சந்தேகநபர்களை கைது செய்தனர்.  

Advertisement

கொழும்பு 14 மற்றும் 15 பகுதிகளைச் சேர்ந்த 18-24 வயதுடையவர்களே இவ்வாறு கைது செயய்யப்ட்டுள்ளனர்

சம்பவத்தில் உயிரிழந்த நபர் பயணித்த கார் கேகாலை-மாவனெல்ல வீதியில் மீட்கப்பட்டுள்ளது.  

இச்சம்பவம் தொடர்பாக ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version