இலங்கை
பிரபல பிண்ணனி பாடகர் விரைவில் கைது ; அம்பலமான பெரும் மோசடி
பிரபல பிண்ணனி பாடகர் விரைவில் கைது ; அம்பலமான பெரும் மோசடி
பிரபல பாடகர் பாத்தியா ஜெயக்கொடி மற்றும் பல உயர் பாதுகாப்பு அதிகாரிகளை கைது செய்ய இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அவசர விசாரணைகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
வேரஸ் கங்கா திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி கொள்முதல் செயல்முறையை மேற்கொள்ளாமல் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் செலவிடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகவும் இந்த கைது இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதனால் அரசாங்கத்திற்கு ரூ. 27.6 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாத்தியா நடத்தும் “ஷோட்டவுட் என்டர்டெயின்மென்ட்” நிறுவனம் மீது ஏற்கனவே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முறைப்பாடுகளை பெற்றிருந்தாலும், அவை குறித்து இதுவரையில் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட முறைப்பாடுகளை மறைத்த பாதுகாப்பு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.