இலங்கை

7 ஆவது முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலாளர் மாநாடு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது!

Published

on

7 ஆவது முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலாளர் மாநாடு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது!

2025 ஆம் ஆண்டுக்கான 7 ஆவது (இரண்டாவது சுற்றின் முதலாவது) முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதேச செயலாளர் மாநாடு (25)   காலை 8.30 மணிக்கு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதாக மாவட்ட பிரதேச செயலாளர் மாநாடு பொது நிருவாக, மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுற்றறிக்கையின் பிரகாரம் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பிரதேச செயலத்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டது.

Advertisement

இதன் பிரகாரம் இந்த ஆண்டுக்கான முதல் சுற்று மாநாடு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலகங்களிலும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

மீண்டும் இந்த ஆண்டுக்கான இரண்டாவது சுற்றின் முதலாவது பிரதேச செயலாளர் மாநாடு இன்றைய தினம் மாந்தை கிழக்கில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்கு வருகைதந்த மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் பிரதேச செயலகத்தின் சுற்றுப்புறச் சூழலை அலுவலக முறைமை என்பவற்றை முதலில் பார்வையிட்டனர்.

Advertisement

இந்த ஆண்டுக்கான முதல் சுற்று மாநாடு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலகங்களிலும் சிறப்பாக நடைபெற்று முடிந்தமையை முன்னிட்டும் அனைத்து 6 பிரதேச செயலகங்களினதும் பொதுமக்களிற்கான சேவையை உற்பத்தித் திறனுடனும் தரமாகவும் வழங்குவதற்கு பிரதேச செயலாளர்களும் அனைத்து உத்தியோகத்தர்களும் அர்ப்பணிப்போடு செயற்பட்டு வருவதனை அரச அதிபர் பாராட்டியதுடன் ஓர் முன்மாதிரியான மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தை உருவாக்கும் இப்பணிக்கு பிரதேச மட்டத்தில் தலைமை தாங்கும் பிரதேச செயலாளர்களிற்கு மெச்சுரை (Commendation) வழங்கிப் பாராட்டினார்.

தொடர்ந்து நடைபெற்ற பிரதேச செயலாளர் மாநாட்டில், கடந்த முறை நடைபெற்ற மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட பல்வேறு விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் முதலில் கலந்துரையாடப்பட்டன.

தொடர்ந்து பிரதேச செயலகங்களின் நிர்வாக , நிதி, திட்டமிடல் செயற்பாடுகள், முன்னேற்றங்கள், குறைபாடுகள், சமூக நலச்சேவை செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள், இந்த வருடத்தில் செயற்படுத்த வேண்டிய திட்டங்கள், 2025 வரவு செலவுத் திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான நிதி ஓதுக்கீடு தொடர்பிலும் அதன் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் இனங்காணப்பட்டுள்ள அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

Advertisement

குறிப்பாக கடந்த பிரதேச செயலாளர் மாநாட்டில் பிரதேச செயலக, மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். 

இம்முறை மாந்தை கிழக்கு சமூக மட்ட அமைப்புக்களின் (Community-Based Organizations (CBOs)) பிரதிநிதிகளும் கலந்துகொண்டதுடன் அமைப்புக்களின் தேவைகள், பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது சிறப்பம்சமாகும்.

இந்த மாநாட்டில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன்,மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட பிரதம கணக்காளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்,மாவட்ட நலன்புரி நன்மைகள் சபையின் மாவட்ட இணைப்பாளர், மாந்தை கிழக்கு, துணுக்காய், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், வெலிஓயா முதலான பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், உதவிப்பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள், மற்றும் எனைய உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version