இலங்கை

பல்கலைக்கழகத்தில் பகிடிவதையால் பலியான மாணவன் ; சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை

Published

on

பல்கலைக்கழகத்தில் பகிடிவதையால் பலியான மாணவன் ; சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர், அண்மையில் பகிடிவதையின் பின்னர் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த அறிக்கை அடுத்த வாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என சப்ரகமுவ பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த தெரிவித்துள்ளார்.

Advertisement

அதன்படி, தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த குறித்த மாணவரின் மரணம் தொடர்பில் விசாரணையில் கண்டறியப்பட்ட விடயங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிடும் எனவும் அவர் கூறினார்.

சம்பவம் தொடர்பாக சுமார் 70 மாணவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக குறித்த விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version