இலங்கை

போதைப்பொருளுடன் சிக்கிய ஐந்து சந்தேக நபர்கள்!

Published

on

போதைப்பொருளுடன் சிக்கிய ஐந்து சந்தேக நபர்கள்!

சீதுவை  பொலிஸ் பிரிவின் ராஜபக்ஷபுர, 18வது  மைல்கல் மற்றும் கொட்டுகொட பகுதிகளில் பொலிஸார்  மேற்கொண்ட சோதனை  நடவடிக்கையின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று சனிக்கிழமை (26) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ராகம, களனி, சீதுவ மற்றும் கட்டுநாயக்க பகுதிகளைச் சேர்ந்த  26, 27 மற்றும் 29 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

இதன் போது, சந்தேகநபர்களிடமிருந்து 27 கிராம் 255 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version