உலகம்
ஜெர்மனியில் 100 பயணிகளுடன் தடம் புரண்ட ரயில் – மூவர் பலி, பலர் படுகாயம்!
ஜெர்மனியில் 100 பயணிகளுடன் தடம் புரண்ட ரயில் – மூவர் பலி, பலர் படுகாயம்!
தென்மேற்கு ஜெர்மனியில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
ஸ்டட்கார்ட் அருகே ரீட்லிங்கனில் ரயில் விபத்துக்குள்ளானதாக டாய்ச் பான் நிறுவனர் தெரிவித்தார். விபத்து இடம்பெறுவதற்கு சற்று முன்பு அந்தப் பகுதியில் புயல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தின்போது சுமார் 100 பேர் ரயிலில் இருந்ததாக ஜெர்மன் செய்தி நிறுவனம் dpa தெரிவித்துள்ளது.
ஜெர்மன் சான்சலர் ஃப்ரீட்ரிக் மெர்ஸ், எக்ஸ் தளத்தில் “பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்து” அவர்களது குடும்பங்களுக்கு தனது “ஆழ்ந்த அனுதாபத்தை” தெரிவித்துள்ளார்.
உள்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர்களுடன் தான் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், அவசர சேவைகளுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை