இலங்கை
நாமலை கைதுசெய்ய நீதிமன்ற பிடியாணை!
நாமலை கைதுசெய்ய நீதிமன்ற பிடியாணை!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு இன்று திங்கட்கிழமை (28) பிற்பகல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒன்று தொடர்பான விசாரணைகளுக்காக நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்தமையினால் அவருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.