இலங்கை

விமான நிலையத்தில் இந்திய பிரஜைகள் கைது; மீட்கப்பட்ட ஆபத்தான பொருள்

Published

on

விமான நிலையத்தில் இந்திய பிரஜைகள் கைது; மீட்கப்பட்ட ஆபத்தான பொருள்

  10 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (28) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் இந்தியா நாட்டைச் சேர்ந்த 36 வயதுடைய ஆணும் 56 வயதுடைய பெண்ணும் ஆவர்.

Advertisement

சந்தேக நபர்களான இந்திய பிரஜைகள் இருவரும் மலேசியாவில் இருந்து இன்றைய தினம் அதிகாலை 12.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

பின்னர் சந்தேக நபர்களான இந்திய பிரஜைகள் இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்களான இந்திய பிரஜைகள் இருவரும் கொண்டு வந்த 2 பயணப்பொதிகளில் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கிராம் குஷ் போதைப்பொருள் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version