இலங்கை

பூப்புனித நீராட்டு விழாவில் நடனமாடிய இளைஞன் – திடீர் உயிரிழப்பு!

Published

on

பூப்புனித நீராட்டு விழாவில் நடனமாடிய இளைஞன் – திடீர் உயிரிழப்பு!

மல்லாகம் பகுதியில் பூப்புனித நீராட்டுவிழா நிகழ்வொன்றில்  நடனம் ஆடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பண்டத்தரிப்பு – பல்லசுட்டி பகுதியைச் சேர்ந்த அன்னராசா அலெக்ஸன் (வயது 19) என்பவரே மேற்படி  உயிரிழந்தவராவார்.

Advertisement

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

ஒலிபெருக்கியில் பாடல் ஒலிக்கும்போது  இளைஞர்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார் அப்போது  திடீரென கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார்.

உடனடியாக அவரை தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது,  அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் முன்னெடுக்கப்பட்டன. மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை தெல்லிப்பழை பொலிஸார் நெறிப்படுத்தினர்.

மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version