இலங்கை

மக்களுக்கான இன்றைய வானிலை எச்சரிக்கை!

Published

on

மக்களுக்கான இன்றைய வானிலை எச்சரிக்கை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும், சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும்

Advertisement

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், தெற்கு மாகாணத்திலும், மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும் எனவும்

தற்காலிகமாக வீசும் பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைக்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version