இலங்கை

மது போதையால் கவிழ்ந்த வாகனம்; யுவதி உட்பட நால்வர் காயம்

Published

on

மது போதையால் கவிழ்ந்த வாகனம்; யுவதி உட்பட நால்வர் காயம்

  ஹொரணை – இலிம்ப பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் யுவதி உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (28) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

கெப் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது கெப் வாகனத்தில் பயணித்த யுவதி உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெப் வாகனத்தின் சாரதி மது போதையில் வாகனத்தை செத்தியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version