இலங்கை

செம்மணியில் மேலும் 4 புதிய எலும்புத் தொகுதிகள் அடையாளம்

Published

on

செம்மணியில் மேலும் 4 புதிய எலும்புத் தொகுதிகள் அடையாளம்

  யாழ்ப்பாணம் – செம்மணியில் இன்று வரையான காலப்பகுதியில் 115 எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் அவற்றுள் 102 எலும்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.

Advertisement

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியின் இரண்டாவது கட்டத்தின் 25ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் (30) நடைபெற்றன.

இதன்போது சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா கூறுகையில்,

இந்நிலையில், இன்றைய தினம் 4 புதிய எலும்புத் தொகுதிகள் அகழ்வுப் பிரதேசம் ஒன்றில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் இன்றைய தினம் மூன்று மனித எலும்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

இவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புத் தொகுதிகள் நீதிமன்றத்தின் கட்டுக்காவலுக்குள் உட்படுத்தப்பட்டுள்ளன.

இன்றைய நாள் முடிவில் இதுவரை 115 எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 102 எலும்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version