இலங்கை

செம்மணி மனிதப்புதைகுழியில் மேலும் ஏழு என்புத்தொகுதிகள்!

Published

on

செம்மணி மனிதப்புதைகுழியில் மேலும் ஏழு என்புத்தொகுதிகள்!

அரியாலை – செம்மணி மனிதப்புதைகுழியின் நேற்றைய அகழ்வின் போது மேலும் ஏழு என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதை
புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத்தொகுதிகளின் எண்ணிக்கை 111ஆக அதிகரித்துள்ளது. செம்மணி மனிதப்புதை குழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 24ஆம் நாள் நடவடிக்கைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன.

இதன்போதே 7 என்புத்தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டதுடன், மூன்று என்புத்தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப்புதைகுழியில் இருந்து இதுவரை 111 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரை 99 என்புத்தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version