இலங்கை

இளைஞனின் உயிரை பறித்த பேருந்து ; பொலிஸாரிடம் சிக்கிய சாரதி

Published

on

இளைஞனின் உயிரை பறித்த பேருந்து ; பொலிஸாரிடம் சிக்கிய சாரதி

குருணாகல் – நாரம்மல வீதியில் பிலகொல்ல சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வீரம்புகெதர பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (30) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

குருணாகலில் இருந்து நாரம்மல நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கலுகமுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஆவார்.

Advertisement

இதனையடுத்து பஸ் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் வீரம்புகெதர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version