இலங்கை

நல்லூர் கந்தசுவாமி ஆலய இரண்டாம் திருவிழா ; வெள்ளி மயில் வாகனத்தில் வந்த கந்தன்

Published

on

நல்லூர் கந்தசுவாமி ஆலய இரண்டாம் திருவிழா ; வெள்ளி மயில் வாகனத்தில் வந்த கந்தன்

  வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் இரண்டாம் திருவிழா நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.

இரண்டாம் திருவிழாவின் மாலை முருக பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும் வள்ளி தெய்வானை அன்னப்பட்சி வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர் .

Advertisement

அலங்கார பிரியன் நல்லூர் கந்த சுவாமியாருக்கு 25 நாட்களும் ஒவ்வொருநாளும் புதுப்புது அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதைப்  பார்க்க கோடி கண்க
ள் வேண்டும்.

நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சப் பெருவிழாவிற்கு பெருமளவு புலம்பெயர் தமிழர்களும் நாட்டுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version