இலங்கை

மரணதண்டனை கைதி விடுவிப்பு; விசாரணைக்கு வரும் மனு

Published

on

மரணதண்டனை கைதி விடுவிப்பு; விசாரணைக்கு வரும் மனு

2015 ஜனாதிபதித் தேர்தலின் போது இரத்தினபுரியின் கஹவத்த பகுதியில் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர மற்றும் மூவரை மேன்முறையீட்டு நீதிமன்ற விடுவித்தது.

இந்நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபர் தாக்கல் செய்த சிறப்பு மேன்முறையீட்டு மனுவை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விசாரிக்க உயர் நீதிமன்றம் இன்று (31) முடிவு செய்தது.

Advertisement

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபர் தாக்கல் செய்த சிறப்பு மேன்முறையீட்டு மனுவை அடுத்த ஆண்டு பிப்ரவரி 13 ஆம் திகதி விசாரிப்பதற்கான திகதியை உயர் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

இந்த சிறப்பு மேன்முறையீட்டு மனு உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஜனக் டி சில்வா, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் பரிசீலிக்கப்பட்டது

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version